கடலூர் மாவட்டம் சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பள்ளியின் முதல்வர் ரூபியால் ராணி தலைமை வகித்தார். டாக்டர் ராதாகிருஷ்ணன் படத்திற்கு பள்ளியின் தாளாளர் வீனஸ்குமார், மெட்ரிக் பள்ளியின் துணை முதல்வர் சார்லஸ் கஸ்பார்ராஜ், நர்சரி பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர்ரா ஜன் ஆகியோர் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர். விழாவில் சிறப்பு விருந்தினராக சிதம்பரம் கல்வி மாவட்ட அதிகாரி மோகன், முன்னாள் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பிச்சைமுத்து ஆகியோர் கலந்துகொண்டு ராதாகிருஷ்ணன் குறித்த கல்விப் பணி மற்றும் அவர் ஆசிரியராக இருந்த போது அர்ப்பணிப்புடன் பணியாற்றியது குறித்தும் பேசினர். பின்னர் ஆசிரியர்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியை தீபா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஆசிரியர் கதிரவன் நன்றி கூறினார்.