tamilnadu

img

இதயவால்வு மாற்று அறுவை சிகிச்சையில் தலைசிறந்து விளங்கும் தமிழ்நாடு

சென்னை:
அறுவைச் சிகிச்சைகள் இல்லாமல் நவீன முறையில் இதய வால்வுகளை மாற்றும் சிகிச்சை தொழில்நுட்பத்தில் தமிழகம் தலை சிறந்து விளங்குவதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அறுவைச் சிகிச்சையின்றி இதய வால்வுகளை மாற்றும் மருத்துவ முறைகள் குறித்த தேசியக் கருத்தரங்கு சென்னையில்  நடைபெற்றது.  நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட இதய அறுவை சிகிச்சை நிபுணர்களும், மருத்துவர்களும் பங்கேற்றனர். அதன் ஒருபகுதியாக மருத்துவமனைகளில் மேற்கொள்ளப் பட்ட நவீன இதய வால்வு மாற்று சிகிச்சை, நேரலையில் கருத்தரங்கக் கூடத்தில் ஒளிபரப்பப் பட்டது.அதைத் தொடர்ந்து வால்வு மாற்று சிகிச்சை குறித்த சிறப்பு பதிவேட்டினை தயாரிப்பதற்கான தொடக்க விழா நடைபெற்றது. அதில், பங்கேற்று பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்  மருத்துவ சேவை அளிப்பதிலும்,அதற்கான வசதிகளை வழங்குவதிலும் தமிழகம் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக விளங்கி வருகிறது. பல்வேறு சுகாதாரத் துறை சார்ந்த நடவடிக்கைகளிலும் நாம் முன்னோடியாக விளங்குகிறோம். அந்த வரிசையில், அறுவைச் சிகிச்சை இல்லாமல்  இதய வால்வினை மாற்றும்நடைமுறைகளில்  தமிழகம் சிறப்புறசெயல்பட்டு வருகிறது. 

ஏழை விவசாயிகள் இருவருக்குநவீன இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை அரசு மருத்துவமனையில் இலவசமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.இந்நிகழ்ச்சியில், அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப்சி.ரெட்டி, துணைத் தலைவர் பிரீத்தாரெட்டி, இதய அறுவைச் சிகிச்சை நிபுணர் ஜி.செங்கோட்டுவேலு, காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் எஸ்.மணிவண்ணன், இதய அறுவைச் சிகிச்சைநிபுணர் ஏ.பி.கோபாலமுருகன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.