போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்காக மாநில அரசு ரூ.2,446 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
2024 ஏப்ரல் மாதம் முதல் 2026 மார்ச் மாதம் வரை ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற பணியாளர்கள் மொத்தம் 6,867 பேருக்கு இந்த நிதி வழங்கப்பட உள்ளது.
இந்நிதி மூலம் வருங்கால வைப்பு நிதி (PF), பணிக்கொடை (Gratuity), விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட நிலுவைத் தொகைகள் வழங்கப்படும்.
இந்தத் தொகையை உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
