சென்னை,ஜூலை 10- மாநிலங்களவை தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மனு ஏற்கப்பட் டதை தொடர்ந்து தனது வேட்பு மனுவை என்.ஆர்.இளங்கோ திரும்ப பெற்றுக்கொண்டதால் திமுக, மதிமுக, அதிமுக, பாமக ஆகிய கட்சிகளை சேர்ந்த 6 பேரும் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய் யப்படுகிறார்கள். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்க ளுக்காக கடந்த 1 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி யது. திமுக சார்பில் தொமுச பொதுச் செயலாளர் சண்முகம், மூத்த வழக்கறிஞர் வில்சன், மதிமுக சார்பில் வைகோ ஆகி யோர் கடந்த 6 ஆம் தேதி வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரியும், சட்டப் பேரவை செய லாளருமான சீனிவாசனிடம் தாக்கல் செய்தனர். தேச துரோக வழக்கில் வைகோ வுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது வேட்பு மனு ஏற்கப்படுமா? என்ற சந்தேகம் நிலவியது. இதைத் தொடர்ந்து திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கடந்த 8 ஆம்தேதி மனுதாக்கல் செய்தார். வேட்புமனு பரிசீல னையின் போது வைகோ மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதை யடுத்து என்.ஆர்.இளங்கோ புத னன்று(ஜூலை10) தனது மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டார். அதிமுக சார்பில் சந்திரசேக ரன், முகமதுஜான், பாமக மருத்து வர் அன்புமணி ராமதாஸ் ஆகி யோர் கடந்த 8 ஆம் தேதி வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இவர்களின் மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மொத்தம் 6 பேர் மனுக்கள் மட்டுமே இருப்ப தால் அந்த 6 பேரும் போட்டி யின்றி எம்.பி.க்களாக தேர்வு செய் யப்படுகிறார்கள்.