சென்னை, செப்.19- சென்னை நங்கநல்லூரில் உள்ள பிரபல திரையரங்குகளான வெற்றிவேல், வேலன் ஆகிய திரையரங்குகளுக்கு மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் 30 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வரும் வெற்றிவேலன் மற்றும் வேலன் ஆகிய திரையரங்குகள் சுமார் ரூ.60 லட்சம் வரி பாக்கியுடன் 6 ஆண்டுகளாக மாநகராட்சிக்கு வரி செலுத்தாததால் மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை மின் இணைப்புகளை துண்டித்து திரையரங்குகளுக்குச் சீல் வைத்துள்ளனர்.