மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் விடுமுறை குறித்த அறிவிப்பு திடீரென நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பும் பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு மார்ச் 16-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கொரோனாவின் தாக்கம் அதிகம் உள்ள கேரளாவை ஒட்டியுள்ள குமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் 5-ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கும் மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த விடுமுறை அறிவிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக இன்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கை பெற்றோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.