திருவண்ணாமலை வன விரிவாக்க மையத்தில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்காக, வனத்துறை சார்பில், வனமும் வாழ்வும் பயிற்சியை துவக்கி வைத்து ஆசிரியர்களுக்கு கையேடுகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், மாவட்ட வன அலுவலர் சுதாகர், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
