சென்னை,ஜூன் 15- கல்லூரிகளில் சேரும் மாணவி களுக்கு 1000 ரூபாய் வழங்குவதற் கான ஏற்பாடுகள் அனைத்தும் தயா ராகிவிட்டதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- மாணவிகளுக்கு உயர்கல்வி உறுதித்தொகை ரூ.1,000 வழங்கு வதற்கான ஏற்பாடுகள் தயார் நிலை யில் உள்ளது. முதலாம் ஆண்டு மாண வர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்ட தும் ரூ.1,000 உறுதித்தொகை நேரடி யாக மாணவியரின் வங்கிக்கணக் குக்கு செலுத்தப்படும். மேலும், முதி யோர் உதவித்தொகை வழங்கும் பணி இனி விரைவுபடுத்தப்படும். தாமதம் இருக்காது. 1 முதல் 5 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைப்பார். அதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகிறது. பள்ளி மாண வர்களுக்கான சீருடைகள் தைக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரை வில் வழங்கப்படும். 18 வயதைக் கடந்து சிலர் காதல் திருமணம் செய்து கொள்வ தும் குழந்தை திருமணம் என்றே கருதப்படுகிறது. குழந்தைத் திரு மணத்தை தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். சத்துணவு முட்டை டெண்டரில் கிறிஸ்டி நிறுவ னம் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான தரவுகள், புகார்கள் ஏதும் அரசிடம் இல்லை. தொடர்ந்து டெண்டர் கோரும் நிறுவனங்கள் பட்டியலில் கிறிஸ்டி நிறுவனமும் உள்ளது. விலைப்பட்டி யலை பொறுத்து டெண்டர் ஒதுக்கப் படும். சத்துணவு பணியாளர் நியமனம் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும். முதியோர்களுக்கான தனி கொள்கை வடிவமைக்கப்பட்டு வரு கிறது விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு கீதாஜீவன் தெரி வித்தார்.