tamilnadu

பராமரிப்பு பணிக்காக ரயில் சேவை குறைப்பு: பயணிகள் கடும் அவதி

சென்னை, ஜூலை 7- பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் புற நகர் ரயில்களின் சேவை குறைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது.  இந்நிலையில், விடு முறை தினமான ஞாயிறன்று (ஜூலை 7) காலை முதல் ரயில்களின் சேவை குறைக்கப்பட்டதால் பயணி கள் கடும் அவதிப்பட்டனர்.  கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில் கோடம்பாக்கம் வரை மட்டுமே இயங்கியது. பிறகு அங்கிருந்து வேறு ரயிலில்  ஏறி பயணிகள் தாம்பரம் சென்றனர். அதேபோல் தாம்பரத்திலிருந்து வந்த ரயில் கோடம்பாக்கம் வரை மட்டுமே இயங்கியது. பிறகு கோடம்பாக்கத்திலிருந்து பயணிகள் வேறு ரயிலில் ஏறி கடற்கரை வரை சென்றனர். இதனால் பயணி கள் கடுமையாக அலைக்கழிக்க நேரிட்டது. இதனால் கோடம்பாக்கம் ரயில் நிலையத்தில் பயணி கள் கூட்டம் அலைமோதி யது. உள்ளூர் பயணிகள் மட்டுமின்றி வெளியூர் பயணி களும் அவதிப்பட்டனர். ரயில்களும் பல மணி நேரம் காலதாமதமாக வந்து சென்றது பயணிகளை சிரமத்துக்கு உள்ளாக்கியது.