districts

img

நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் தற்காலிக இடமாற்றம்: பயணிகள் கடும் அவதி

நாகப்பட்டினம், அக்.9 - நாகப்பட்டினம் மாவட்டம் புதிய பேருந்து  நிலையம் தற்காலிக இடமாற்றம் செய்யப் பட்டிருப்பதால்   மக்கள் அவதிக்குள்ளாகின்ற னர். நாகப்பட்டினம் தலைமைப் பேருந்து நிலையத்தை தகுந்த முன்னேற்பாடு இல்லா மல் தற்காலிக இடமாற்றம் செய்ததால், மக்கள் அவதிப்படுகின்றனர். நாகை புதிய பேருந்து நிலையம் சீரமைப்பு பணி நடை பெற்று வருவதால், அருகில் உள்ள அவுரி திடலில் பேருந்துகளை நிறுத்தி வைத்துள்ள னர். பொதுக் கூட்டங்கள் நடைபெறும் அவரி திடலில் எவ்வித முன்னேற்பாடும் இல்லாமல்  பேருந்துகளை நிறுத்தியதால் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். கடந்த இரு நாட்களாக நாகையில் மழை  பெய்து வருவதால், பேருந்து பயணிகள் அனைவரும் மழையில் நனைந்தபடியே பேருந்தில் ஏற வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது. பருவமழையின் தாக்கம் அதிகம் இருப்பதால், கட்டுமான பணிகளை முன் கூட்டியே செய்திருந்தால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டிருக்காது. நகரப் பேருந்து, புற நகர் பேருந்து என இரு இடங்களில் பேருந்துகளை நிறுத்துவதால் பயணிகள் குழப்பமடைகின்றனர். நாகப்பட்டினம் தலைமை பேருந்து நிலை யம் என்பதால் அனைத்து மாவட்டங்களிலி ருந்தும் உள்ளூர், வெளியூர்களிலிருந்தும் பேருந்துகள் வந்து செல்கின்றன. பள்ளி கல்லூரி மாணவர்கள் வந்து செல்வதற்கும், இப்பேருந்து நிலையமே முதன்மையாக செயல்படுகிறது. வெளியூர்களுக்கு செல்லக் கூடிய பேருந்துகள் எந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என்ற தகவலும் தெரியாததால், குழப்பத்திற்கு உள்ளா வதாக மக்கள் தெரிவிக்கின்றனர். பயணி களுக்கான கழிவறையும் கட்டுமான பகுதி களில் தடை செய்யப்பட்டிருப்பதால், பயணி கள் இயற்கை உபாதைகளை கழிக்க மிகுந்த  சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.  பொதுக் கூட்டங்கள் நடைபெறும் அவுரி திடல் மண் தரையை கொண்ட பகுதியா கும். மழைக்காலமான தற்போது பேருந்து கள் சென்று வந்து கொண்டிருப்பதால், அந்த  இடமே சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.  மற்றொரு பகுதியான நகரப் பேருந்து கள் நிறுத்தும் இடம் மருத்துவமனைக்கு செல்லக்கூடிய பகுதி ஆகும். அங்கிருக்கும் வாடகை கார் நிறுத்தும் பகுதியில் பேருந்துகள் நிறுத்தப்பட்டிருப்பதால் நெரிசல்  அதிகமாக இருக்கிறது. மக்கள் அப்பகுதி யில் நின்று, மழையில் நனையாமல் பேருந்தில் ஏறுவதற்கு நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து சிபிஎம் நகரச் செயலாளர் க.வெங்கடேசன், நகராட்சி ஆணையரை தொடர்பு கொண்டு பேசியபோது, ‘பொது மக்களுக்கும் பயணிகளுக்கும் எவ்வித இடையூறும் இல்லாத வகையில் வழிவகை  செய்வதாகவும், கட்டுமானப் பணிகள் விரைந்து நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்வ தாகவும் தெரிவித்ததாக’ கூறினார்.