உளுந்தூர்பேட்டை வட்டம் பழங்குணம் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிராம நத்தத்தில் குடியிருக்கும் 18 தலித் குடும்பத்தினர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உளுந்தூர்பேட்டை ஒன்றியச் செயலாளர் ஆர்.சீனிவாசன் தலைமையில் வியாழனன்று உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பட்டா வழங்கக்கோரி மனு அளிக்க வந்தனர். உடன் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் வி.ரகுராமன் மற்றும் கிளைச் செயலாளர் உள்ளிட்டோர் உள்ளனர்.