tamilnadu

img

பாதுகாப்பு குறைபாடு காரணமாக 2,000 இ-ஸ்கூட்டர்களை திரும்ப பெறும் பியூர் இவி நிறுவனம்  

தெலுங்கானா மற்றும் தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட இ-ஸ்கூட்டர் தீ விபத்து காரணமாக விற்கப்பட்ட 2,000 இ-ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாக பியூர் இவி நிறுவனம் அறிவித்துள்ளது.  

இந்தியாவில் மக்களிடையே எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் பல முன்னணி நிறுவனங்களும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.  

அதேசமயம் கடந்த சில மாதங்களாக தமிழகம் மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் இ-ஸ்கூட்டர்கள் தீப்பிடித்து எரிந்தது. இதனால் எலக்ட்ரிக் இருசக்கர வாகனம் பயன்படுத்துவோர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  

இந்தநிலையில் தமிழகம் மற்றும் நிசாமாபாத்தில் விற்பனை செய்யப்பட்ட 2,000 இ-ஸ்கூட்டர்களை திரும்பப் பெறுவதாக பியூர் இவி நிறுவனம் தெரிவித்துள்ளது.  

தெலுங்கானாவில் இ-ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து தீப்பற்றியதால் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்த நிலையில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.