சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படிக்கும் அ.வேண்டாம் என்ற மாணவிக்கு ஜப்பான் நாட்டின், யுமன் ரிசோஷியா நிறுவனத்தில் ரூ.22 லட்சம் ஊதியத்திற்கு பணி கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ‘ பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்டத்தில் சிறப்பு தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வாழ்த்தினார். மாவட்ட சமூக நல அலுவலர் ச.மீனா உடன் உள்ளார்.