சென்னை,ஜன.19- தமிழகம் முழுவதும் ஞாயிறன்று நடைபெற்ற முகாம்களில் சுமார் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை போலியோ பாதிப்பில் இருந்து காக்கும் வகையில் சுமார் 45 ஆயிரத்து 753 மையங்கள் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெற்ற முகாமில், சுமார் 70 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமது இல்லத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கினார்.