சென்னை,ஜூலை 5- பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை நிரந்தர மாக தடை செய்ய வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொரோனா காலம் என்பது காவல்துறையின் அராஜக சாம்ராஜ்யமாக மாறி வருகிறது.தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தக்கூடிய வேலையை மேற்கொண்டு வருவதை அன்றாடம் பார்த்து வருகிறோம். தமிழகம் முழுவதும் காவல்துறையின் நண்பர்கள் (கசநைனேள டிக யீடிடiஉந) என்ற பெயரில் ஒரு குழுவினர் காவல்துறையினருடன் இணைந்து தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். ஊரில் உள்ள குற்றங்களைப் பற்றி துப்பு கொடுப்பதில் தொடங்கி வாகன சோதனை, வாகன பறிமுதல், கைது செய்வது என்று ஆரம்பித்து போலீசுக்கு தொண்டூழியம் செய்வது, சித்ரவதை செய்வது, வாகன ஓட்டிகள் கடைக்காரர்களிடம் மிரட்டி காசு பறிப்பது என வளர்ந்திருக்கிறார்கள் என்றால் எல்லாம் தரமற்ற தமிழக போலீசின் பயிற்சி தான் காரணமாகும். சாத்தான்குளம் படுகொலைகளில் கூட போலீஸ் நண்பர்கள் குழுவிற்கும் பங்குள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இது குறித்து உரிய விசாரணை செய்ய வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். ஒருபுறம் உரிய வேலையில்லாமல் இருக்கக்கூடிய இளைஞர்களை தன்னோடு எந்த சட்ட வரையறையும் இல்லாமல் இணைத்துக் கொண்டு காவல்துறை செய்யக்கூடிய அட்டூழி யங்களுக்கு இத்தகைய இளைஞர்களும் பலிகடா வாக மாற்றப்படுகின்றனர். காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகளை காவல்துறை நண் பர்கள் என்ற பெயரில் வேலையில்லாத இளை ஞர்களைப் பயன்படுத்தி மேற்கொள்கின்றனர். இந்த வகையில் வேலையில்லாத இளைஞர்களின் உழைப்பை நவீனமுறையில் சுரண்டுகின்றனர். இந்த காவல்துறை நண்பர் கள் குழுவில் இணைந்தால் எதிர்காலத்தில் காவல் துறையில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது என்ற நப்பாசையில் இளைஞர்களும் காவல்துறையின் சூழ்ச்சி வலையில் விழுகின்றனர். மேலும், ஆர். எஸ்.எஸ் உள்ளிட்ட சமூக விரோத அமைப்புகளில் செயல்படுபவர்களும் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களும் காவல்துறை நண்பர்கள் குழு வில் தங்களை இணைத்துக்கொண்டு தவறான முறையில் ஆதாயம்பெற்று வருகின்றனர்.
கிட்டத்தட்ட இந்த குழுவினர் காவல்துறையினரின் அடியாட்கள் போல பயன்படுத்தப்படுகின்றனர். இது போன்ற அமைப்புகளுக்கு எந்த சட்ட வரையறையும் இல்லாமல், காவல்துறையின் விருப்பப்படி காவல்துறை நண்பர்கள் என்ற பெயரில் இணைத்து செயல்படுவது என்பது இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும். இந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் தடை செய்ய வேண்டும் என ஜூலை 4 அன்று தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. அதையொட்டி, தற்சமயம் தற்காலிகமாக இரண்டு மாதங்கள் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை பயன்படுத்தவேண்டாமென தமிழக காவல் துறை டிஜிபி அறிவுரை வழங்கி இருப்ப தாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகும். தமிழகத்தில் நீதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டுவது அவசியமாகும். எனவே, பிரண்ட்ஸ் ஆப் போலீஸை நிரந்தர மாக தடை செய்திட வேண்டுமென தமிழக அரசை யும், காவல்துறையையும் கேட்டுக்கொள்கிறோம். இக்கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 6 ஆம் தேதி தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.