குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து திங்களன்று (ஜன. 10) சென்னை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் உள்ளது. இங்கு 25 வருடத்திற்கும் மேலாக சுமார் 4000 வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த கஜலட்சுமி பட்டா வழங்க ஏற்கெனவே பரிந்துரை செய்துள்ளார்.
இந்த இடம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் குடியிருப்புகளை அகற்ற வருவாய் துறை அதிகாரிகள் படிவம் 6 நோட்டிஸ் கொடுக்க வந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெத்தேல்நகர் பாதுகாப்பு பேரவை சார்பில் தெருவில் பந்தல் போட்டு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பள்ளி மாணவர்கள், பெண்கள் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.
இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர். வேல்முருகன் உள்ளிட்டோர் மக்களுக்கு ஆதரவாக களத்தில் உள்ளனர்.