tamilnadu

சமூக நலத்துறை செயலருடன் ஓய்வூதியர் சங்கத்தினர் சந்திப்பு

சென்னை,அக்.24- தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.நாரா யணன், பொதுச் செயலாளர் இ.மாயமலை, துணைப்  பொதுச் செயலாளர் எம்.பரிமளா, மாநில துணைத்  தலைவர் எஸ்.ஜெ. கட்டபொம்மன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.சொர்ணம் ஆகியோர் சமீ பத்தில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை முதன்மைச் செயலர் எஸ்.மதுமதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர் கவிதா ராமு ஆகியோரை சந்தித்துப்பேசினர். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்  களுக்கு குறைந்தபட்ச பென்சன் ரூ.7850, அக விலைப்படி,மருத்துவப்படி மற்றும் மருத்துவக் காப்பீடு குடும்ப ஓய்வூதியம், இலவச பஸ்பாஸ்  உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித்தரு மாறு வலியுறுத்தப்பட்டது. கோரிக்கைகளை பரி சீலிப்பதாகவும்  மாதாந்திர சிறப்பு ஓய்வூதியத்தை  உயர்த்தி வழங்குவது குறித்தும் அரசின் கவனத் திற்கு கொண்டு சென்று  முடிவெடுப்பதாகவும் சமூக நலத்துறை செயலர் தெரிவித்ததாக சங்கத்தின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.