திருக்கோவிலூர்,நவ.17- திருக்கோவிலூர் நூலகத்தில் நடைபெற்ற 52 வது தேசிய நூலக வார விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட நூலக அலுவலர் இரா.சுப்பிரமணியன் அவர்கள் தலைமை வகித்தார். ரிஷி வந்தியம் தமிழ் சங்கத் தலைவர் சு.ராஜேந்திரன், மாவட்ட மைய நூலகர் ம.இளஞ்செழியன், முன்னாள் ராணுவ வீரர் கு.கல்யாண்குமார், மாவட்ட நலக் கல்வியாளர் ப.அன்பு நிலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நல்நூலகர் மு.அன்பழகன் வரவேற்றார். வாசகர் வட்டக் குழுத்தலைவர் கவிமாமணி சிங்கார.உதியன் தொடக்கவுரையாற்றினார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வருவாய் கோட்டாட்சியர் கி.சாய் வர்தினி தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை மூலம் வழங்கப்பட்ட 1062 புதிய தமிழ் நூல்களின் புத்தக கண்காட்சியை திறந்துவை த்து பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி சிறப்புiயாற்றினார். அருட்கவிஞர் அருள்நாதன் தங்கராசு, அனைத்து நிலை ஆசிரியர் சங்கத் தலைவர் எஸ்.குருரா ஜன், உதவித் தலைமை யாசிரியர் ந.காமராஜ், நல்லா சிரியர்கள் கு.நெடுஞ்செழி யன், கவுஸ் சாதிக் ஷெரிப், ஆசிரியர்கள் ஜானகிராமன், தா.சிவக்குமார், ஜெ.விமலா, கதிர்வேல், அப்துல்கலாம் மன்ற மாவட்டத் தலை வர் பொன்.முருகன், குரு மிசன் அறக்கட்டளை பிரக தீஸ்வரர், ஆயுள்காப்பீட்டு க்கழக முகவர்கள் இராம.சுதாகரன், ந.செந்தில், விதை விருட்சம் அ.சிதம்பரநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விழா ஏற்பாடுகளை நூலகப் பணியாளர்கள் சு.சம்பத், அ.கிருஷ்ண மூர்த்தி, ச.தேவி, ரா.ரீனா, செ.சரண்யா, கு.வாசுகி ஆகியோர் செய்திருந்தனர். நூலகர் கி.ராஜேந்திரன் நன்றி கூறினார்.