tamilnadu

img

141 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட முகிலன் எங்கே இருந்தார்? நீடிக்கும் மர்மம்!

சென்னை,ஜூலை 7- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, கூடங்குளம் அணு உலை, எதிர்ப்பாளரும் சமூக ஆர்வலரு மான முகிலன் கடந்த பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி சென்னை எழும்பூரிலி ருந்து தூத்துக்குடிக்கு ரயிலில் புறப்பட்ட போது திடீரென காணாமல் போனார். இதுபற்றி தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரான லயோலா மணி எழும்பூர் ரயில்வே காவல்நிலை யத்தில் புகார் அளித்தார். அதில் தமிழ்நாடு சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரான முகிலனை ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக யாரேனும் கடத்திச் சென்றிருக்கலாம் என சந்தேகிப்ப தாக குறிப்பிட்டிருந்தார். இதுபற்றி எழும்பூர் ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். ரயில் நிலையத்தில் உள்ள கேமராக்கள் ஆய்வு செய்யப் பட்டன. ஆனால் முகிலன் எங்கு சென்றார் என்பது தெரியாமலேயே இருந்தது. இதற்கிடையே முகிலனை கண்டுபிடித்து ஆஜர்படுத்த காவல் துறையினருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹென்றி டிபேன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 27 ஆம்தேதி விசார ணைக்கு வந்தது. நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.நிர்மல் குமார் ஆகியோர் முன்பு வழக்கு விசாரணை நடைபெற்றது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், ‘முகிலன் வட இந்தியாவில் இருப்ப தாக பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. முகநூல் பக்கத்தில் முகிலன் எங்கே? என்ற பதிவில், ராஜபாளையம் காவல் ஆய்வாளர் முகமது கவுஸ், ‘சமாதி’ என்று பதில் போட்டுள்ளார். இது எங்களுக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது’ என்று தெரி வித்தார். பின்னர், சி.பி.சி.ஐ.டி., போலீசார் மூடி முத்திரையிடப்பட்ட உறை யில் விசாரணை குறித்த புதிய அறிக்கையை தாக்கல் செய்தனர். இதை படித்து பார்த்த நீதிபதிகள், ‘காவல்துறையினரின் புலன் விசாரணை சரியான திசையில் செல்கிறது. விசாரணை புதிய புதிய கோணத்தில் நடந்து வருவதாகவும், ஒவ்வொரு முறையும் புதுபுது தகவல்கள் கிடைத்து வருவதாகவும் காவல்துறை தரப்பில் கூறுகின்ற னர். எனவே, இந்த சூழ்நிலையில் விசாரணை விவரங் களை வெளி யிட முடியாது. இந்த வழக்கு விசார ணையை 8 வாரத் துக்கு தள்ளி வைக்கிறோம்’ என்று தெரிவித்தனர். இந்த நிலையில் திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலன் 142 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டு ள்ளார். முகிலனை பார்த்ததாக அவரது நண்பர் சண்முகம் சமூக வலைதளத்தில் பரப்பிய தகவலை தொடர்ந்தே முகிலன் மீட்கப்பட்ட தகவல் தெரிய வந்தது. திருப்பதி ரயில் நிலையத்தில் காவல்துறையினர் முகிலனை கையை பிடித்து இழுத்துச்  செல்வது போலவும், அப்போது அவர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வும், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராகவும் கோஷ மிட்டபடி செல்வது போலவும் ரயில்வே காவல் நிலையத்தில் அவரை அமர வைத்திருப்பது போன்றும், வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. திருப்பதி ரயில் நிலையத்துக்கு வந்த மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு தாடியுடன் ஒருவர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷமிட்டுக் கொண்டிருந்தார். அந்த நபரை ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் பிடித்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போதுதான் அவர் மாயமான முகிலன் என்பது தெரிய வந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் தமிழக காவல்துறையினர் அவரை சென்னைக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து, திருப்பதி ரயில்வே காவல்துறையினர் முகிலனை காட்பாடிக்கு அழைத்து வந்தனர். துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்புடன் ரயில் நிலை யத்துக்கு அழைத்து வரப்பட்ட முகிலன் காட்பாடி ரயில்வே காவலர்களிடம் ஒப்படைக்கப்பட் டார். அவரிடம் வேலூர் நகர டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் மற்றும் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.  சி.பி.சி.ஐ.டி காவல் ஆய்வாளர் வஜ்ரவேலு தலைமையிலான காவலர்கள் முகிலனை மருத்துவ பரிசோதனைக்காக அடுக்கம் பாறை அரசு  மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பரிசோத னைகள் முடிந்த பின்னர் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். அவரிடம் எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 141 நாட்களாக முகிலன் எங்கு இருந்தார்? என்ன செய்தார்? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. பிப்ரவரி மாதம் காணாமல் போன பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முகிலன் எங்கெல்லாம் தங்கினார்? என்பது பெரும் கேள்வி எழுந்துள்ளது. இதற்கு விடைகாணும் வகையில் காவல்துறையினர் முகிலனிடம் பல்வேறு  விசாரணை நடத்தி வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர். முகிலனை கண்டுபிடிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு நிலுவையில் இருப்பதால் அவரை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் திங்களன்று(ஜூலை 8) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார்கள்.