tamilnadu

தூய்மை பணிக்காக 57 புதிய வாகனங்கள் மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

தூய்மை பணிக்காக 57 புதிய வாகனங்கள்
மேயர் பிரியா தொடங்கி வைத்தார்

பெருநகர சென்னை மாநகராட்சிக் குட்பட்ட தண்டையார்பேட்டை, ராய புரம், திரு.வி.க. நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய 7 மண்ட லங்கள் முழுவதும் சாலைகள் மற்றும் தெருக்களில் உள்ள கட்டட மற்றும் இடி பாட்டுக் கழிவுகளை அகற்றும் வகை யில் கட்டிடக் கழிவுகளை அகற்றும் தீவிரத் தூய்மைப் பணியை கடந்த ஜன 7அன்று மேயர் பிரியா முதற்கட்டமாக தொடங்கி வைத்தார். பெருநகர சென்னை மாநகராட்சி யின் மண்டலங்கள் 1 முதல் 15 வரை யில் கட்டடக் கழிவுகளை அகற்றும் வகையில் தீவிரத் தூய்மைப் பணிக்காக ஏற்கெனவே உள்ள 102 வாகனங்களு டன் கூடுதலாக டிப்பர் லாரிகள், மினி லாரிகள், ஜே.சி.பி. வாகனங்கள், பாப்காட் வாகனங்கள் உள்ளிட்ட 57  புதிய வாகனங்களை புதனன்று மேயர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். கடந்த 1.1.2025 முதல் 28.2.2025 வரை யிலான இரண்டு மாத காலத்தில் சட்ட விரோதமாக கட்டிட கழிவுகளை கொட்டிய 260 நபர்கள் மீது கண் காணிப்பு படையினரால் ரூ. 13 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணை யர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.