வார இறுதியில் 677 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை,மார்ச் 5- அரசு விரைவுப் போக்கு வரத்துக் கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறி இரு ப்பதாவது:- வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் (மார்ச் 8, 9) சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்து தினசரி இயக்கப் படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்து களை இயக்க திட்டமிடப் பட்டுள்ளது. இதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர் ்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம் புத்தூா், சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்க ளுக்கு வெள்ளிக்கிழமை (மார்ச்7) 265 பேருந்துகளும், சனிக்கிழமை (மார்ச்8) 270 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோல, கோயம்பேட் டில் இருந்து திருவண்ணா மலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங் களுக்கு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 51 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், மாதவரத்தில் இருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் தலா 20 பேருந்துகள் என ஆக மொத்தம் 677 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட வுள்ளன.