tamilnadu

img

மக்கள் ஒற்றுமை வலுப்படுத்தி சுதந்திரம் காப்போம்! கருத்தரங்கில் தலைவர்கள் அறைகூவல்

சென்னை, ஆக.16-  இந்திய அரசமைப்பு சாசன மாண்புகளைப் பாதுகாக்கப் பாடு வடுவதன் மூலமாக நாட்டின் சுதந்தி ரத்தைப் பாதுகாப்போம் என்று சுதந்திர தினக் கருத்தரங்கத்தில் அறைகூவல் விடுக்கப்பட்டது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் சனிக்கிழமையன்று (ஆக.15) இணையத்தள வழியாக சுதந்திர தினக் கருத்தரங்கம் நடை பெற்றது. அதில் உரையாற்றிய தலை வர்கள், சுதந்திரப் போராட்டத் தியாகி களை நினைவுகூர்ந்து சுதந்தி ரத்தைப் பாதுகாக்க உறுதியேற்க வேண்டுகோள் விடுத்தனர்.

து.ரவிக்குமார் எம்.பி.,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் பொதுச்செயலாளரும் நாடாளு மன்ற மக்களவை உறுப்பினரு மான து.ரவிக்குமார், ”கருத்துச் சுதந்திரத்தின் மீது பல திசைகளி லிருந்தும் கட்டாரி வீசப்படுகிறது. மாற்றுக்கருத்துகளை முன்வைக் கிறவர்கள் பொய் வழக்குகள், அவ தூறுகள், தனிப்பட்ட முறையில் கேவலப்படுத்துவது போன்ற  வழிமுறைகளில் ஒடுக்கப்படு கிறார்கள்,” என்றார். இப்படிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடுகிறவர்கள் மீது ஆதாரப்  பூர்வமாகப் புகார்கள் செய்யப்பட்டா லும் நடவடிக்கை எடுக்கப்படுவ தில்லை. இதுவும் ஒருவகையில் கருத்துரிமை மீதான தாக்குதல்தான். நீதிமன்றமே இப்படியான தாக்கு தலைத் தொடுக்கிற ஒரு திருப்பு முனை என்றே சொல்ல வேண்டும். காஷ்மீர் நிலை மாற்றம், ஆண வக்கொலை தடுப்புச் சட்டம் நிறை வேற்ற ஆணையிடக் கோருதல் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த சுமார் 60,000 வழக்குகள் தேங்கி யிருக்கிற நிலைமையிலும், மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூஷன் மீது உச்சநீதிமன்றமே தானாக முன்வந்து வழக்குத் தொடுத்து, அதை விரைவாக நடத்தி முடித்து அவர் குற்றவாளி என தீர்ப்பளித்திருக் கிறது. அவருக்கு சிறைத்தண்டனை அளிக்கப்படுமா அல்லது வழக்குரை ஞர் தகுதி பறிக்கப்படுமா என்று தெரி யவில்லை. நீதிபதிகள் நியமன முறை  உள்பட நீதித்துறை சீர்திருத்தங் களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டிய சூழல் உருவாகியிருக் கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உ.வாசுகி
மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி, “இந்துக் களின் நலன்களுக்காக என்று ஆர்எஸ்எஸ், பாஜக தலைவர்கள் பேசுவதைப் பார்த்து அது நல்லது தானே என்று இந்து மக்கள் நினைக்க க்கூடும். உண்மையில் அரசு நட வடிக்கைகளால் பாதிக்கப்படுகிற கோடிக்கணக்கான அடித்தட்டு மக்களும் தொழிலாளர்களும் விவ சாயிகளும் இந்துக்கள்தான். ராம னுக்குக் கோயில் கட்டுவது பிரச்ச னையே இல்லை. அதைப் பல இந்துக் கள் வரவேற்பது ராமன் மீது கொண்ட பக்தியால். ஆனால் ஆர் எஸ்எஸ்-பாஜக செய்வது பக்தி யால் அல்ல, அரசியல் ஆதிக்கத் திற்காக மதத்தையும் தேசியத்தை யும் பயன்படுத்துகிற உத்தியால்” என்று கூறினார். துருக்கியில் ஒரு வரலாற்றுச் சின்னம் தொழுகைக்கான மசூதி யாக்கப்பட்டது உள்ளிட்ட செய்தி களைக் குறிப்பிட்ட அவர், பல வலது சாரி நாடுகளில் இப்படி அரசியல் அதிகாரத்திற்காக மத உணர்வு பயன்படுத்தப்படுகிறது என்றார். இந்தியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஒரே மாநிலமான ஜம்மு-காஷ்மீரின் நிலை யை மாற்றியதன் மூலம், அதன் மக்கள்தொகை தன்மையை மாற்று வதற்கான முயற்சி நடக்கிறது. பள்ளிப் பாடப் புத்தகங்களிலிருந்து மாணவர்களைக் கேள்வி கேட்கக் கூடியவர்களாக வளர்க்கக்கூடிய பெரியார் சிந்தனை, கேப்டன் லட்சுமி உள்ளிட்ட பாடங்கள் நீக்கப் படுவதில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரல் இருக்கிறது. இதற்கு எதிராக மக்கள் ஒற்றுமையை வலுவாகக் கட்டுவது ஒரு கட்டாயத் தேவை என்றும் அவர் கூறினார். காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு தலைவர் கோபண்ணா பேசுகை யில், “மதவாத சக்திகள் மக்களிடம் செல்வாக்கு இல்லாமலே தங்கள் நோக்கங்களைச் சாதித்திருப்பதை நினைவில் கொள்ள வேண்டும். 1984 தேர்தலுக்குப் பிறகுதான் பாஜக அயோத்தி பிரச்சனையைக் கையில் எடுத்தது,” என்றார்.

தாவூத் மியாகான்
ஜனநாயகம் வழங்கியுள்ள வழி களைப் பயன்படுத்தித்தான் நரேந்திர மோடி நாட்டின் பிரதமரானார். ஆனால் ஜனநாயகத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதை யெல்லாம் புரிந்துகொள்ள இளை ஞர்கள் விடுதலைப் போராட்ட வர லாற்றைப் படிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். தலைமை தாங்கிய காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளை பொதுச் செயலாளர் தாவூத் மியாகான், “இந்தியா விடுதலையடைந்த பிறகு பிறந்த தலைமுறைகளுக்கு, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க முடியாத ஏக்கம் இருக்கும். சுதந்திரத்தையும், மதச்சார்பின்மை மாண்புக்கான அரசமைப்பு சாச னத்தையும் பாதுகாக்கிற போராட்ட த்தில் பங்கேற்கிற வாய்ப்பு உருவாகியிருக்கிறது,” என்றார். நிகழ்வைத் தொகுத்தளித்த, மேடையின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருணன், ” ஊட கங்களை வளைப்பது தமிழகத் திற்கும் வந்திருக்கிறது என்றால், மற்ற பல மாநிலங்களில் எந்த அள வுக்கு இருக்கும் என்று ஊகிக்க லாம். இந்திய சுதந்திரம் யாரோ வாங்கிக்கொடுத்த கடைச்சரக்கு அல்ல. மகத்தான மக்கள் இயக்கங் களாலும் பல்லாயிரக்கணக்கா னோரின் தியாகங்களாலும் கிடைத்ததே சுதந்திரம். இதைப் பாதுகாப்பதோடு இணைந்ததுதான் மதவெறியை மாய்ப்பதும்,” என்றார். மேடையின் செயற்பாட்டுக்குழு உறுப்பினர் எஸ்.என்.சிக்கந்தர் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் க.உதயகுமார் நன்றி கூறினார்.

சுதந்திரமானவர்கள்தான், ஆனால் பயந்திருக்க வேண்டியவர்கள். சுதந்திரமானவர்கள்தான், ஆனால்  ஏமாற்றப்பட்டவர்கள், சுதந்திரமானவர் கள்தான் ஆனால் சமத்துவமற்றவர்கள். ஆயினும் சுதந்திர தினத்தைப் பெருமை யோடு கொண்டாடுவோம். சுதந்திரத்தை நாம் அடையத் தங்கள் இன்னுயிரைத் தத்தம் செய்தவர்களின் நினைவைப் போற்றுவோம். போராட்டத்தின் உன்னதப் பாரம்பரியம் அரசமைப்பு சாசன மாண்புகளாக உள்ளது. நமது  குடியரசைக் காப்பது அந்த மாண்புகளைக் காப்பதில் உள்ளது.

மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தியின் வாழ்த்துரையிலிருந்து

எல்லாப் பிரிவு மக்களும் ஒன்றுபட்டுப் போராடியதால்தான் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து விடுதலை பெற முடிந்தது. சுதந்திரத்தைப் பாதுகாக்க, மக்கள் முன்னேற அனைத்து சாதிகளையும் மதங்களையும், மொழிகளையும் சேர்ந்த  மக்களின் ஒற்றுமையை மேலும் விரிவாக்கி வலுப்படுத்துவது மிக அவசியம். அதற்காகப்  பாடுபட சபதமேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.  

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்  என்.சங்கரய்யா வாழ்த்துரையிலிருந்து

 அனைத்துச் சாதிகளையும் மதங்களை யும் சேர்ந்த மக்களை ஒன்று திரட்டிப் போராடியதால்தான் நாடு சுதந்திரம் அடைந்தது. எண்ணற்ற தியாகங் களைச் செய்த அவர்களுக்குத் தலை வணங்குவோம், நன்றி தெரிவிப்போம். 1947 ஆகஸ்ட் 17ல் தேசியக் கொடியை ஏற்றியபோது, “உலகம் உறங்கிக்கொண்டிருக்கிறபோது நாம் விழித்திருக்கிறோம். இந்த விழிப்பைத் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும்” என்று அறைகூவல் விடுக்கப்பட்டது. அதைப் பாதுகாக்கும் வகையில்தான் நாட்டின் அரசியலமைப்பு சாசனம் அமைக்கப்பட்டது. அதன் அடிப்படையில்தான் வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை என்பது உள்ளிட்ட உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டன. அரசின் மதச்சார்பின்மை ஒரு முக்கியமான  மிக அடிப்படையான கூறு. அதைப் பாதுகாக்க உறுதியேற்போம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்  ஆர்.நல்லகண்ணு வாழ்த்துரையிலிருந்து