சென்னை,அக்.05- சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், தமிழ்நாடு காவல்துறையின் அடக்குமுறைகளைக் கண்டித்தும் சென்னையில் இடசாரி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளர்களுக்குச் சங்கம் சேர்க்கும் உரிமையை வழங்க வேண்டும், சம ஊதியம், எட்டு மணி நேர வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் நிறுவன தொழிலாளர்கள் 4ஆவது வாரமாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவாக இடதுசாரி கட்சிகளான சிபிஐ(எம்), சிபிஐ மற்றும் சிபிஐ(எம்.எல்) ஆகியவை அக்டோபர் 5ஆம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் இன்று இடதுசாரி கட்சிகள் சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தலைவர்கள் உட்படப் பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்