பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச சுற்றுலா வர்த்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அரங்கில் இடம் பெற்றுள்ள ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரன் சிலையுடன் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் நிழற்படம் எடுத்துக் கொண்டனர்.