tamilnadu

img

திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி மறைவு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்!

திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.புகழேந்தி மறைவிற்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் அளித்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராகவும், விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய திரு நா.புகழேந்தி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

மறைந்த திரு நா. புகழேந்தி எளிமையானவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுடன் இனிமையாக பழகக் கூடியவர். அவரது மறைவு விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி மக்களுக்கு பேரிழப்பு.

அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தினருக்கும், திராவிட முன்னேற்றக் கழக தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.