tamilnadu

img

மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

சென்னை,அக்டோபர்.21- மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி-யை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது  
சென்னையில் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் சார்பாக மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்கள் மீதான ஜிஎஸ்டி-யை ரத்து செய்ய வேண்டும். மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகளுக்கான சட்டத்தை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளி வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
 சங்கத்தின் தலைவர் பி.சத்யநாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாநில பொதுச்செயலாளர் ஜி.சுகுமாறன், சங்கத்தின் அகில இந்திய தலைவர் ரமேஷ் சுந்தர், பொதுச் செயலாளர் ஜி.விவேகானந்தன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.