கடலூர், நவ. 29- கடலூர் பகுதியில் பெய்த மழையால் வீடு இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக பலியானார்கள். 3 பேர் படு காயங்களுடன் மருத்துவ மனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த 3 நாட்களாகவே இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களாக சராசரி யாக கடலூரில் 5 சென்டி மீட் டர் மழை பதிவாகி உள்ளது. கடலூர் கம்மியம் பேட்டை ரைஸ்மில் தெரு வைச் சேர்ந்தவர் நாராய ணன். மர வேலைகள் செய்து வருகிறார். இவருக்கு மாலா என்ற மனைவியும், மகேஸ் வரி, ரஞ்சிதா, என்ற 2 மகள் களும் உள்ளனர். மகேஸ்வ ரிக்கு திருமணமாகி விட்டது. அவருக்கு தனஸ்ஸ்ரீ யுவஸ்ஸ்ரீ என்ற 2 குழந்தைகள் உள்ள னர். மகேஸ்வரி தனது குழந் தைகளுடன் தந்தை வீட்டில் வசித்து வந்தார். வியாழக் கிழமை இரவு நாராயணன் அவரது குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்தார். கடந்த சில நாட்க ளாக பெய்துவரும் மழையின் காரணமாக நாராயணனின் வீட்டை சுற்றிலும் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி நின்றது. திடீரென வீட்டின் சுவர் முற்றிலும் நனைந்து திடீரென இடிந்து விழுந்தது. வீட்டின் இடிபாடுகளுக்குள் நாராய ணன் மற்றும் அவரது குடும் பத்தினர் சிக்கினர். அவர்க ளின் அலறல் சந்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஓடிச்சென்று இடிந்த வீட்டிற்குள் சிக்கிக் கொண்ட நாராயணன் மற்றும் அவரது குடும்பத்தி னரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் கட்டி டத்தின் இடிபாடு அதிகமாக இருந்ததால் அவர்களை மீட்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து கட லூர் தீயணைப்புத் துறை யினருக்கு தகவல் கொடுத்த னர். அதன்பேரில் தீய ணைப்பு படைவீரர்கள் சம் பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இடிந்த சுற்றுச்சுவர் உள்ளிட்டவை களை அகற்றி கட்டிடத்தின் இடிபாட்டுக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கட்டிட இடிபாடு களுக்குள் நாராயணனின் மனைவி மாலா மற்றும் மகள் மகேஸ்வரி, மகேஸ்வரியின் ஒரு வயது மகள் தனஸ்ஸ்ரீ ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டனர். மேலும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நாராயணன், ரஞ்சிதா, மகேஸ்வரியின் மற்றொரு குழந்தை யுவஸ்ஸ்ரீ உறவி னர் குமரன் ஆகிய 4 பேரை யும் தீயணைப்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது. வீடு இடிந்து விழுந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் கடலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.