சென்னை, ஜூன் 16- காவல் பணியிலும் ஈடு படும் பெண் போலீசாருக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்கும் விதத்தில் ‘ஆனந்தம்’ கவுன்சிலிங் திட்டத்தை தமிழக அரசு அறித்துள்ளது. இத்திட்டத்தின் நோக்கம் குடும்ப பணிகளிலும், காவல் நிலைய பணிகளி லும் ஈடுபடும் பெண் காவலர்க ளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்கு வதற்கு அவர்களுக்கு வாரத்தில் 3 நாள் கவுன்சி லிங் மூலம் மன அழுத்த த்தை குறைப்பது தான். இந்த கவுன்சிலிங் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டே டியம் அருகே வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் நடக்கிறது. முதல் நாள் முகாமை காவல் துறை ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் 4,821 பெண் போலீசார் பங்கேற்றனர். அவர்களுக்கு சுயசிந்தனைக்கான பயிற்சி, எப்போதும் மகிழ்ச்சியாக முற்போக்கு சிந்தனையும் ஒருங்கிணைந்து செயல்படு வதற்கான பயிற்சி அளிக்கப் பட்டு யோகா பயிற்சியும் வழங்கப்பட்டது. இந்த முகாம் தொடர்ந்து இரண்டு மாதம் நடக்கிறது. முகாமில் அவர்களுக்கு ரத்த அழுத் தம், காது, மூக்கு, தொண்டை பிரச்சினை, புற்றுநோய், கர்ப்பபை பிரச்சினைக ளுக்கு மருத்துவ குழுவி னர் பரிசோதனை செய்து சிக்சிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.