tamilnadu

img

தமிழகத்தில் மேலும் 3,943 பேருக்கு கொரோனா தொற்று... 

சென்னை 
தமிழகத்தில் கொரோனா பரவல் தாக்கம் கடந்த 6 நாட்களாக எதிர்பார்க்க முடியாத அளவிற்கு உச்சத்தில் உள்ளது. இந்த 6 நாட்களில் தினசரி பாதிப்பு 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது செய்தி தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சி அலையை உருவாகியுள்ளது. 

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 3,943 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 90 ஆயிரத்தை (90,167) தாண்டியுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 60 பேர் பலியாகியுள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,201 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனாவால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 325 ஆக அதிகரித்துள்ளது. மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்து 704 ஆக உயர்ந்துள்ளது.    
சென்னையில் மட்டும் இன்று 2,393 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்த பாதிப்பு 60 ஆயிரத்தை (58,327) நெருங்கி வருகிறது. பலி எண்ணிக்கையும் 888 ஆக அதிகரித்துள்ளது.  சென்னைக்கு அடுத்து மதுரையில் 257 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  மதுரையில் மொத்த பாதிப்பு 2,557 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.