கொரோனா நோய் தொற்று மின் நுகர்வோர் - ஊழியர்கள் பாதுகாப்பு விழிப்பு ணர்வு முகாம் புதனன்று (ஜூலை 15) மயிலாப்பூர் மின் கட்டண வசூல் மையத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மத்திய சென்னை கிளை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மயிலாப்பூர் செயற்பொறியாளர் மாணிக்கவேலன் தலைமை தாஙகினார். மத்திய சென்னை திட்ட நிர்வாக அலுவலர் ராஜகோபால், மத்திய அமைப்பின் நிர்வாகிகள் எம்.தயாளன், சீனிவாசன், கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இராயப்பேட்டை காவல் ஆய்வாளர் முன்னிலையில் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பொறியாளர்கள். ஊழியர்கள் .மின் நுகர்வோர்கள் பங்கேற்றனர்.