சென்னை, டிச.23 - ‘மிக்ஜம்’ புயலின் போது பெய்த கனமழை காரணமாக எண்ணூர் முகத்துவாரம் பகுதியில், சென்னை பெட்ரோ கெமிக்கல் நிறுவன வளாகத்திலிருந்து வெள்ள நீரோடு கலந்து வெளிவந்த எண்ணெய் கசிவால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு ரூ.8 கோடியே 68 லட்சம் நிவாரணம் வழங்க தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-
“கொசஸ்தலை ஆற்றில், எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் டிச.5 அன்று ஏற்பட்ட எண்ணெய் கசிவை அகற்ற தமிழ்நாடு அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால் காட்டுக் குப்பம், சிவன் படை குப்பம், எண்ணூர் குப்பம், முகத்துவார குப்பம், தாழங்குப்பம், நெட்டுக் குப்பம், வ.உ.சி.நகர், உலகநாத புரம் மற்றும் சத்தியவாணி முத்து நகர் ஆகிய கடலோர மீனவ கிராமங்களில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளில் எண்ணெய் படிந்து சேதம் ஏற்பட்டது.
மேலும், இக் கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்ல இயலாத தால் வாழ்வாதாரமும் பாதிக்கப் பட்டது. இதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச் சரால் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என அறி விக்கப்பட்டு, அத்தொகையும் ஏற்கெனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, கூடுதலாக மீனவ கிராமங்களை சேர்ந்த 2,301 குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக தலா ரூ.12,500 வீதமும், மேலும் எண்ணெய் கசி வால் பாதிக்கப்பட்ட 787 மீன்பிடி படகுகளை சரிசெய்ய, படகு ஒன்றுக்கு தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.3 கோடி வழங்கப் படும்.
இதனை தொடர்ந்து, கூடுதலாக மீனவ கிராமங்களை சேர்ந்த 2,301 குடும்பங்களுக்கு நிவாரண தொகையாக தலா ரூ.12,500 வீதமும், மேலும் எண்ணெய் கசி வால் பாதிக்கப்பட்ட 787 மீன்பிடி படகுகளை சரிசெய்ய, படகு ஒன்றுக்கு தலா ரூ.10,000 வீதம் மொத்தம் ரூ.3 கோடி வழங்கப் படும்.
இந்த நிவாரணத் தொகையை பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். எனவே, மிக்ஜம் புயல் கனமழையால் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு ரூ.8 கோடியே 68 லட்சம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.