tamilnadu

img

கோவிட்-19 : சென்னையில் ராயபுரத்தில் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 2,324 ஆக உயர்வு

சென்னை ராயபுரத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,324 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 827 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,372 ஆக அதிகரித்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 145 ஆக அதிகரித்துள்ளது. 9,909 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். சென்னையில் 12,762 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 102 பேர் உயிரிழந்துள்ளனர்; 6,330 பேர் குணமடைந்துள்ளனர். 

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 2,324 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 26 பேர் உயிரிழந்துள்ளனர். தண்டையார்பேட்டையில் 1,322 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 11 பேர் உயிரிழந்துள்ளனர். கோடம்பாக்கத்தில் 1,646 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 8 பேர் உயிரிழந்துள்ளனர். தேனாம்பேட்டையில் 1,412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 14 பேர் உயிரிழந்துள்ளனர். திரு.வி.க நகரில் 1,393 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 20 பேர் உயிரிழந்துள்ளனர். அண்ணா நகரில் 1089 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 13 பேர் உயிரிழந்துள்ளனர்.