சென்னை,டிச.5 மாரடைப்புக்கு அடுத்த படியாக நரம்பியல் பாதிப்புகளால் உயிரிழப்பு கள் அதிகரித்துள்ளதாக டி.வி.எஸ்.நிறுவனர் வேணு சீனிவாசன் கூறினார். சென்னையில் நடை பெற்ற புத்தி கிளினிக் 10வது ஆண்டு விழாவில் பேசிய அவர் உலகளவில் உயி ரிழப்போர் எண்ணிக்கை 30 லட்சம் பேர் ஆகும். அதில் உயிரிழப்பிற்கான காரணங்க ளில் மாரடைப்புக்கு அடுத்தபடியாக இருப்பது நரம்பியல் கோளறுகள் ஆகும். நியூரோலாஜிகள் மற்றும் மன நலம் சம்மந்தப்பட்ட நோய்கள் அதிகரித்து வருகிறது. இதனால் மனிதன் சில குறை பாடுகளோடு வாழவேண்டிய நிலையை ஏற்படுத்துகிறது. இதில் வளர்ந்து வரும் நாடுகள் வளர்ந்த நாடுகள் என வேறுபாடு இல்லை. அமெரிக்காவிலும் இந்த பிரச்சனை உள்ளது. மூளை மற்றும் மன வளம் சம்மந்தப்பட்ட நோய்க ளுக்கு சிகிச்சை அளிப்பதி லும் சீரான நிலையை மீண்டும் அடைவதிலும் புத்தி கிளினிக் 10 ஆண்டுகளில் அளப்பரிய பணிகளை செய்துள்ளதாகவும் அவர் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் வைத்தியநாத் குழும இயக்கு நர் அனுராக் சர்மா, சிட்னி நகரில் உள்ள நரம்பியல் ஆராய்ச்சி நிலை பேராசிரி யர் பர்மீந்தர் சச்தேவ், புத்தி கிளினிக் நிறுவனர் எனப்பாடம் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.