tamilnadu

img

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்டப் பொருளாளர் அசோக் சாதி வெறி சக்திகளால் படுகொலை

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்டப் பொருளாளர் அசோக் சாதி வெறி சக்திகளால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து வாலிபர் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை அறிவொளி பூங்கா அருகே மாவட்டச் செயலாளர் ந.அன்பரசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் மாநில நிர்வாகி ஆறுமுகம், தலைவர் பி.சுந்தர், சிபிம் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன், ப.செல்வன், எம்.பிரகலநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

 

 

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்  மாவட்டப் பொருளாளர்   அசோக்கின் படுகொலையை  கண்டித்தும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

 

 

நெல்லையில் வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் அசோக்கை சாதி வெறியர்கள் கொலை செய்ததைக் கண்டித்து தேன்கனிக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேகர், மாவட்டக்குழு உறுப்பினர் அனுமப்பா, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் நாகேஷ்பாபு, துணைத் தலைவர் இருதயராஜ், கிளைத் தலைவர் அம்ரிஷ், வட்டச் செயலாளர்கள் முத்து, கணேஷ், வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.