tamilnadu

நாயக்கனேரி ஊராட்சித் தலைவர் வழக்கில் மேல்முறையீடு செய்க! தமிழ்நாடு அரசுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்!

சென்னை, செப். 20 - நாயக்கனேரி ஊராட்சித் தலைவர் பதவியை பட்டியலினப் பெண்ணுக்கு ஒதுக்கிய அரசாணையையும், தேர்த லில் பட்டியலினப் பெண் இந்துமதி  பெற்ற வெற்றியை ரத்து செய்தும் சென்னை உயர் நீதிமன்றம் அளித் துள்ள தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்  என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே. சாமுவேல் ராஜ் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஊராட்சித் தேர்தலில் வென்றும் பதவியேற்க முடியாத அவலம்

திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஒன்றியம், நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவி கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பட்டியலின பெண்ணிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. எனவே, இங்கு இந்துமதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் இத்தொகுதியை பட்டியலின பெண்ணிற்கு ஒதுக்கீடு செய்தது தவறு என்றும் ஆகவே, இந்துமதிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கூடாது என்றும் நாயக்கனேரி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சிவகுமா ரும், முன்னாள் வார்டு உறுப்பினர் செல்வராஜும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தி ருந்தனர். இதனால் இந்துமதி பதவி ஏற்க முடியாத நிலை இருந்து வந்தது.

மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் போராட்டம்

இதனை எதிர்த்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் பல்வேறு ஜனநாயக அமைப்புகள் இணைந்து வழக்கை நடத்தி வந்தன. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருடன் சந்திப்புகள் மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நீதிக்கான போராட்டங்களும் நடத்தப்பட்டன. 

தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.  பிரசாந்த் மற்றும் கே.சி. காரல் மார்க்ஸ், பர்வீன் ஆகியோர் வழக்கில் ஆஜராகி வந்தனர். 

அரசுத் தரப்பில் மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் தேர்தல் ஆணையத்தின் மூத்த வழக்கறிஞர் என அனைவருமே இவ்வழக்கில் இந்து மதிக்கு பதவியேற்பு செய்து வைத்திட வேண்டும் என்று வாதிட்டனர்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மேல்முறையீடு செய்யும்!

எனினும் வழக்கில் வெள்ளியன்று (செப்.20) தீர்ப்பளித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவியை பட்டியலினப் பெண்ணுக்கு ஒதுக்கி பிறப்பித்த அரசா ணையை ரத்து செய்தும், ஊராட்சி மன்றத் தலைவராக பட்டியலினப் பெண்  தேர்வு செய்யப்பட்டதை ரத்து செய்தும்  தீர்ப்பு வழங்கியுள்ளார்.

மேலும் நாயக்கனேரி ஊராட்சித் தலைவர் பதவியை பொதுப் பிரிவைச்  சேர்ந்த பெண் அல்லது பழங்குடி யின பிரிவு பெண்ணுக்கு நான்கு வாரங் களில் ஒதுக்கிட உத்தரவிட்டுள்ளார். 

இந்நிலையில், மாநில அரசு உடனடி யாக இவ்வழக்கில் மேல்முறையீடு செய்திட வேண்டும் என்று வலியுறுத்து வதோடு இந்துமதி தரப்பில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஜனநாயக அமைப்புகள் சார்பிலும் மேல்முறை யீட்டு மனு தாக்கல் செய்யப்படும். 

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.