tamilnadu

img

வாக்குச்சாவடி அருகே பணப்பட்டுவாடா செய்த அதிமுக பெண் நிர்வாகி கைது  

திருவான்மியூரில் வாக்குச்சாவடி அருகே பணப்பட்டுவாடா செய்த அதிமுக பெண் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.  

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிமுதல் நடைபெற்று வருகிறது. இதனால் வாக்குச்சாவடிகளில் போலீசார் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.  

இந்நிலையில் சென்னை மாநகராட்சி 179வது வார்டு திருவான்மியூரில் வாக்குச்சாவடி அருகே அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த ஒரு ஆண், ஒரு பெண் என இருவரும் கையில் வாக்குச்சீட்டுடன் பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்தனர். இதை பார்த்த பொதுமக்கள் அங்கிருந்த பறக்கும் படையினரிடம் தகவல் தெரிவித்தனர்.  

அதைதொடர்ந்து தேர்தல் பறக்கும் படையினர் வருவதை பார்த்த அதிமுகவினர் கையில் வைத்திருந்த பணம் மற்றும் வாக்குச்சீட்டை கீழே வீசி விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதில் தப்பி ஓடும்போது கலா என்ற அதிமுக பெண் நிர்வாகியை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.  

மேலும் கீழே வீசி சென்ற ஐந்தாயிரம் ரூபாய் பணத்தையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.