tamilnadu

img

ஜெய்பால் ரெட்டி மறைவு

சீத்தாராம் யெச்சூரி இரங்கல்

புதுதில்லி, ஜூலை 28- மத்திய முன்னாள் அமைச்சர் எஸ். ஜெய்பால் ரெட்டி மறை வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி இரங்கல் தெரிவித்துள்ளார். சீத்தாராம் யெச்சூரி அனுப்பி யுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது: ஜெய்பால் ரெட்டியின் நீண்ட கால அரசியல் வாழ்க்கையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டிருப்பதை ப்போல, நாட்டின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களை உயர்த்திப்பிடிப்பதற்கும் வலுப் படுத்துவதற்கும் உறுதி யுடன் பாடுபட்டார். நிமிர்ந்த,  நேர்மையான அரசியல்வாதி யான அவருடைய அறிவுக் கூர்மை மற்றும் மேதைமையை அனைவரும் அறிவார்கள். சுமார் நாற்பதாண்டு காலமாக அவருடன் நான் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தேன். அவர் மறைவு, நாட்டில் உள்ள மதச்சார்பற்ற ஜனநாயக சக்தி களுக்குப் பேரிழப்பாகும். நான் என்னுடைய இதயப் பூர்வமான அஞ்சலியை அவருடைய குடும்பத்தாருக்கும், அவரைப் பின்பற்றும் ஆதர வாளர்கள் மற்றும் நண்பர் களுக்கும் தெரிவித்துக் கொள் கிறேன். இவ்வாறு இரங்கல் செய்தி யில் தெரிவித்துள்ளார். (ந.நி.)