அமெரிக்காவில் படகு ஒன்று தீபிடித்து மூழ்கிய விபத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் கலிபோர்னியாவின் தெற்கே சான்டா பார்பரா நகருக்கு மேற்கில் சான்டா குரூஸ் தீவின் கடலோர பகுதியில் 75 அடி நீள படகொன்றில் சுற்றுலாப்பயணிகள் ஸ்கூபா டைவிங்கிற்காக பயணம் மேற்கொண்டனர். அப்போது அவர்கள் சென்ற படகு திடீரென தீப்பிடித்து எரியத்துவங்கியது. இதனால் படகின் கீழ் பகுதியில் தூக்கத்தில் இருந்தவர்கள் சிக்கி கொண்டனர். இதுபற்றி அறிந்ததும், தீயணைப்பு வீரர்கள், ஹெலிகாப்டர்கள், சிறிய ரக படகுகளில் சம்பவ இடத்திற்கு சென்றனர். எனினும் பற்றி எரிந்த தீ மற்றும் தீவிர வெப்பம் ஆகியவற்றால் படகின் அருகே நெருங்க முடியாமல் உயிர் பிழைத்தவர்களை மீட்பதில் தடை ஏற்பட்டது.
இந்த விபத்தில் 25 பேர் பலியாகி உள்ளனர். மேலும் காணாமல்போன 9 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.