tamilnadu

வேலூர் மற்றும் திருப்பூர் செய்திகள்

காலமானார்

வேலூர், மே 16-சிஐடியு மாவட்ட துணைச் செயலாளரும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட துணைத் தலைவருமான அரக்கோணம் சீனிவாசன் தாயார் முனியம்மாள் உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 55.வியாழனன்று(மே16) காலமான முனியம்மாளின் உடலுக்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.காசிநாதன், துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.காசி, திமுக நகரச் செயலாளர் ஜோதி, விசிக மாவட்டச் செயலாளர் கௌத்தம், கருணாமூர்த்தி, மகாலஷ்மி ஜவுளி கடை இளங்கோ, நகர நகைக் கடை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கௌரிலால் உள்ளிட்ட ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினர்.


திருப்பூரில் 46 ஆவது பின்னலாடை கண்காட்சி

திருப்பூர், மே 16 –46ஆவது இந்திய பின்னலாடைக் கண்காட்சி திருப்பூரில் புதனன்று தொடங்கியது.இக்கண்காட்சியை ஹேண்ட் லும் மற்றும் காதி துறையின் தமிழ்நாடு முதன்மை செயலர் குமார் ஜெயந்த், நிட் பேர் அசோசியேஷன் தலைவர் சக்திவேல் ஆகியோர் ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கு ஏற்றியும் துவக்கி வைத்தனர். இந்த கண்காட்சி வரும் 17 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் காட் டன் அல்லாத பாலியஸ்டர்,வகை ஆடைகள் மற்றும் காட்டன் லினன் காட்டன் ஆடைகள் மற்றும் வாழை மரத்தின் நார் மற்றும் பருத்தி இழைகளால் செய்யப்பட்ட புதிய ரக ஆடைகள் இடம் பெற்றுள்ளன.இந்த கண்காட்சியை காண இஸ்ரேல், கனடா, ஆஸ்திரேலியா,சிங்கப்பூர், அமெரிக்கா மற்றும் ஐரோப் பிய ஒன்றிய நாடுகளில் இருந்து 100 வர்த்தகர்கள், 40 க்கும் மேற்பட்ட அயல் நாட்டு இறக்குமதியாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கண்காட்சியில் 50 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜா சண்முகம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.