வேலூரில் உள்ள பொய்கை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் கோகுல் சாலையில் விழுந்து கிடந்த விலை உயர்ந்த செல்போனை உரியவரிடம் ஒப்படைத்த நேர்மையினை பாராட்டி, இராணுவ வீரர் சங்கர் பரிசு வழங்கி பாராட்டினார். உடன் தலைமையாசிரியர் தட்சிணாமூர்த்தி, உதவி தலைமையாசிரியர் எஸ்.ராஜேஸ்கண்ணா, பெற்றோர் ஆசிரியர் சங்கப் பொருளாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் உள்ளனர்.