வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், கணியம்பாடி, திமிரி, ஆற்காடு, ராணிப்பேட்டை பகுதிகளில் மேல் நத்தம் பாக்கம், கீழ்குப்பம், நம்பித்தாங்கள், வரதராஜபுரம், திமிரி, கணியம்பாடி புதூர் மேலபழந்தை, சக்கரமல்லூர், மேல்புலம், முகமது பேட்டை உள்ளிட்ட கிராமங்களில் வசித்து வரும் வேட்டைக்காரன் பழங்குடியின மக்களுக்கு இலவச வீடு, வீடில்லாதவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா,தொகுப்பு வீடுகள், முதியோர் உதவித் தொகை, அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கக் கோரி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தாட்சாயணியிடம் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.சேட்டு தலைமையில் மாநிலச் செயலாளர் கங்காதுரை, மாவட்டச் செயலாளர் வரதராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எல்.சி.மணி ஆகியோர் வழங்கினர்.