வேலூர், டிச.12- ஆரம்ப காலக்கட்டத்திலே காசநோயை குணப்படுத்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும். விஐடியில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் முனைவர். ஸ்ரீகாந்த் பிரசாத் திரிபாதி கூறியுள்ளார். விஐடியில் உயிர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பள்ளி சார்பில் பாக்டீரியா பேஜ் ஆராய்ச்சி மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு குறித்த சர்வதேச கருத்தரங்கம் தொடங்கி யது. சர்வதேச கருத்தரங்கை தேசிய காச நோய் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் முனைவர். ஸ்ரீகாந்த் பிரசாத் திரிபாதி சிறப்பு விருந்தினராகவும், அமெரிக்காவின் ஒலிம்பி யாவில் உள்ள எவர்கிரீன் மாநில கல்லூரின் பேராசிரியை எலிசபெத் கட்டர் கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டு கருத்த ரங்கை தொடங்கி வைத்தனர். கருத்தரங்கை தொடங்கி வைத்து தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் முனைவர். ஸ்ரீகாந்த் பிரசாத் திரிபாதி பேசு கையில், “காசநோய் 1882 ஆம் ஆண்டு கண்டு பிடிக்ககப்பட்டது, அதற்குண்டான சிகிச்சை முறைகள் 1946 ஆம் ஆண்டு தான் வந்தது. காசநோயை கட்டுப்படுத்த நாம் ஆரம்ப காலக்கட்டத்திலே நோயை கண்டறிய வேண் டும். தற்போது ஆரம்ப கால கட்டத்தில் கண்ட றியப்படும் முறையை காட்டிலும் மேம்ப டுத்தப்பட்ட முறைகளை ஆராய்ச்சிகள் மூலம் நாம் கண்டறிய வேண்டும்” என்றார். காசநோய் பல்வேறு வகையில் உள்ளது. இதில் சில வகை காசநோய்கள் மாத்திரை களால் கூட முழுவதுமாக கட்டுப்படுத்த முடிய வில்லை. இந்தியாவில் சுமார் 30 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் கூறினார். காசநோயால் பதிக்கப் பட்டவர்களுக்கு சரியான முறையில் தான் சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் காசநோயை தடுக்க மேம்படுத்தப்பட்ட புதிய தடுப்பூசி களை நாம் ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரே லியா, சீனா, வியட்னாம் உட்பட 7 நாடு களைச் சார்ந்த வல்லுனர்கள் கருத்தரங்கில் சிறப்புரையாற்ற உள்ளனர். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலத்தில் இருந்தும், தொழிற் வல்லுனர்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களை சார்ந்தோர் சுமார் 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இக்கருத்தரங்கிற்கு இந்திய அரசின் அறி வியல் தொழில்நுட்பத் துறை, உயிர் தொழில்நுட்பத் துறை, எஸ்.இ.ஆர்.பி, சி.எஸ்.ஐ.ஆர், ஐ.என்.எஸ்.எ மற்றும் இங்கி லாந்தை சார்ந்த மைக்ரோ பயோலாஜி அமைப்பு நிதி உதவி அளித்துள்ளது. கருத்தரங்கில் விஐடி இணை துணை வேந்தர் முனைவர். எஸ்.நாராயணன் மற்றும் பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வி ஐ டியின் உயிர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் டீன் முனை வர். வி.பிரகாசம் அனைவரையும் வர வேற்றார். முடிவில் கருத்தரங்கின் ஒருங்கி ணைப்பாளர் என்.ரமேஷ் நன்றி கூறினார்.