அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்எஸ்எஸ் ஓய்வூதியர் சங்கத்தினர் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் தர்ணா போராட்டம் நடத்தினர். மாவட்டத் தலைவர் எம்.ஏழுமலை, செயலாளர் ஏ.கதிர் அகமது, மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன கோட்டச் செயலாளர் ஏ.பெருமாள், மாவட்ட நிர்வாகிகள் நரசிம்மன் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.