tamilnadu

விழுப்புரம், கொச்சி முக்கிய செய்திகள்

குடிநீர் கேட்டு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம், ஆக. 7- விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் விழுப்புரம்  நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்ற னர். இந்த கல்லூரியில் குடிநீர், போதுமான நாற்காலிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறப்படு கிறது. கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் கட்டடங்களும் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. ஏற்கனவே சுத்திகரிப்பு எந்திரம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த எந்திரம் பழுதடைந்ததால் குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் குடிநீர் வசதி செய்து தரக் கோரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஐடிஐ மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வரவேற்பு
விழுப்புரம், ஆக. 7- மாவட்டத்தில் ஐ.டி.ஐ.,களில் காலியாக உள்ள இடங்க ளில் சேர, மாணவர்களிடமிருந்து இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணி யன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் 2019-ம் ஆண்டில் அரசு  ஐ.டி.ஐ.,களில் உள்ள இடங்கள், அரசு உதவிபெறும் தனியார்  ஐ.டி.ஐ., மற்றும் சுயநிதி தனியார் ஐ.டி.ஐ., ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களான மொத்தம் 37 ஆயிரத்து 97  இடங்களை நிரப்பிட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்  கள் பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட கலந் தாய்வு மூலம் முதல் கட்ட சேர்க்கை நிறைவு பெற்றது. இதன் முடிவில் அரசு ஐ.டி.ஐ.,களில் 7,840 இடங்களும்,  தனியார் ஐ.டி.ஐ.,களில் 5,888 இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்ப கடந்த 2ம் தேதி  முதல் வரும் 20ம் தேதி வரை விண்ணப்பங்கள் www.skill training.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன.அரசு ஐ.டி.ஐ.,களில் உள்ள காலியிடங்களில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்கான காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படவில்லை எனில் அந்த இடங்களை மாற்று இனத்தவரைக்கொண்டு நிரப்ப ஆணை வழங்கப்பட்டுள்ளது என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
விழுப்புரம்.ஆக.7- விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், வெள்ளிக்கிழமை (ஆக. 9) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் விழுப்புரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வரும் 9ம் தேதி காலை 10:00 மணி  முதல் மதியம் 2:00 மணி வரை தனியார் துறை நிறுவனங்கள்  பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.  இதில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ  மற்றும் டிகிரி முடித்த இளைஞர்கள் பங்கேற்று பயன்பெற லாம். முகாமில் பங்கேற்க விரும்பும் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், தங்களின் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் சுயக்குறிப்புகளுடன் முகாமில் நேரில் கலந்து கொள்ளலாம் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.

குருவாயூர் தேவசம் போர்டுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
கொச்சி, ஆக. 7- முதல்வரின் வெள்ள நிவாரண நிதியாக குருவாயூர்  தேவசம்போர்டு ரூ.5 கோடி வழங்கியதற்கு எதிரான வழக்கை கேரள உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  இந்த வழக்கை சர்வதேச இந்து பரிஷத் தலைவர் காஞ்ஞிரப்பள்ளியைச் சேர்ந்த பி.அனில் தாக்கல் செய்திருந்தார்.  அதில் பெருவெள்ள காலத்தில் நிவாரண நிதி  வழங்கியது அசாதாரணமான சூழ்நிலையில் எனவும் இது சட்ட விரோதமானது அல்ல எனவும் கூறி நீதிபதிகள் சி.டி.ரவி குமார், என்.நகரேஷ் ஆகியோர் கொண்ட அமர்வு வழக்கை  தள்ளுபடி செய்தது.