திருக்கோவிலூர், ஆக.29- திருக்கோவிலூர் வட்டம் முழுவதும் விவ சாய பாசனத்திற்கான அனைத்து கால்வாய் களையும் சீரமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருக்கோவிலூர் வட்ட, மக் கள் கோரிக்கை மாநாடு வலியுறுத்தியுள்ளது. திருக்கோவிலூர் காந்தி சிலை அருகில் புதனன்று (ஆக.28) நடைபெற்ற மாநாட்டிற்கு வட்டச் செயலாளர் ஆர்.தாண்டவராயன் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் கே.விஜயகுமார் வரவேற்றார். மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பி னருமான பி.டில்லிபாபு, விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.வேல்மாறன், பி.சுப்பிர மணியன், ஏ.வி.ஸ்டாலின்மணி மாவட்டக்குழு உறுப்பினர் வி.உதயகுமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். வட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.ராஜவேல், எம்.பழனி, ஏ.வி.கண்ணன், எம்.பார்வதி ஆகி யோர் மக்கள் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்களை முன்மொழிந்த னர். திருக்கோவிலூர் வட்டம் முழுவதும் 100 நாள் வேலையை அனைத்து ஊராட்சிகளி லும் அமலாக்கி சட்டக்கூலி வழங்க வேண்டும், திருக்கோவிலூர், மணலூர்பேட்டை, அர கண்டநல்லூர் ஆகிய பேரூராட்சிகளில் குடிநீர் பிரச்சனையை தீர்த்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.