tamilnadu

img

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து - 10 பேர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் ராமுதேவன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்; 6க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ராமுதேவன்பட்டியில் சிவகாசியை சேர்ந்த விக்னேஷ்(45) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை திடீரென பட்டாசு ஆலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 6 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்; 6க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிவகாசி மற்றும் கல்லமநாயக்கன்பட்டி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கவும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.