tamilnadu

img

கூடங்குளத்தில் மீண்டும் மின் உற்பத்தி

நெல்லை,ஜன.16-  நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தலா ஆயிரம்  மெகாவாட் மின் உற்பத்தித் திறனுள்ள 2 அணு உலை கள் உள்ளன. இரண்டாவது அணு உலையில் பராமரிப்பு பணிக்காக டிசம்பர் 15-ஆம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப் பட்டது. முதல் அணு உலையில் சில நாட்களுக்கு முன் திடீரென வால்வில் பழுது ஏற்பட்டதால் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது.  இந்நிலையில் பழுது சரி செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. தற்போது 410 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறும் நிலையில் படிப்படியாக முழுத் திறனான ஆயிரம்  மெகாவாட் மின் உற்பத்தி இலக்கை அடையும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். ஏற்கெனவே முழு அளவில் மின் உற்பத்தித் திறனை இவை எட்டிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

;