சென்னை, நவ. 18- கேரள மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் நியாயமான விசா ரணை நடத்தக்கோரி சென்னை ஐஐடி அருகே இரு மாணவர்கள் உண்ணா நிலைப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சென்னை ஐ.ஐ.டி.யில் தங்கி படித்து வந்த கேரள மாணவி பாத்திமா, கடந்த 9 ஆம் தேதி விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு 3 பேரா சிரியர்கள் காரணம் என மாணவி குறிப்பு எழுதி வைத்திருந்தார்.
பேராசிரியர்கள் துன்பு றுத்தல் காரணமாகவே பாத்திமா தற்கொலை செய்து கொண்டதாகவும் இதுபற்றி உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றும் மாணவி யின் பெற்றோர் வலியுறுத்து கின்றனர். தனது மகள் மரணத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டி அவரது தந்தை அப்துல் லத்தீப் தமிழக முதல் வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மனு அளித்தார் இந்நிலையில், பாத்திமா மர ணத்தில் நியாயமான விசா ரணை நடத்தவும், குறை தீர்க்கும் குழு அமைக்கக் கோரியும் ஐஐடி மாண வர்கள் இரண்டு பேர் கல்லூரி அருகே உண்ணா நிலையில் ஈடுபட்டுள்ளனர்.