tamilnadu

img

மெரினா கடற்கரையை 6 மாதத்தில் தரம் உயர்த்த நீதிமன்றம் உத்தரவு

சென்னை, டிச.5- மெரினா கடற்கரையை ஆறு மாதத்தில் உலகத்தரம் வாய்ந்த தாக மாற்றவேண்டும் என மாநகராட்சி மற்றும் காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மெரினாவில் மீன் வியாபாரிகளை ஒழுங்குபடுத்துவது தொடர் பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, சுரேஷ் குமார் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மெரினா கடற்கரையை 6 மாதத்திற்குள் உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும்.  மெரினாவை சுத்தமாக வைப்பது குறித்து டிசம்பர் 13 ஆம் தேதிக்குள்  பதில் தர வேண்டும் என மாநகராட்சி மற்றும் காவல்துறைக்கு உத்தர விட்டனர். மேலும், கடற்கரையில் உணவு பாதுகாப்பு விதிகளை பின்  பற்றாத கடைகளை அகற்றவும் நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.