tamilnadu

img

ராமநாதபுரத்தில் சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது  

வீட்டில் இருந்து வெளியேறிய சிறுமிக்கு ஆதரவாக இருப்பது போல் நடித்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 2 பெண்கள் உட்பட 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரியாங்கோட்டை பகுதியை சேர்ந்த ஒரு 16 வயது சிறுமி. கடந்த வாரத்தில் வீட்டில் சண்டை காரணமாக, வீட்டை வெட்டு வெளியேறி பரமக்குடி பேருந்து நிலையத்தில் தனியாக நின்றுள்ளார். அங்கு, அப்பகுதியை சேர்ந்த நீலாவதி (வயது 45) சிறுமிக்கு ஆதரவு கொடுப்பதுபோல் ஆசை வார்த்தை கூறி பேசியுள்ளார். ஆட்டோ ஓட்டுநர் பாண்டி என்பவரின் உதவியுடன் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். சிறுமியை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். இது குறித்து சிறுமியின் உறவினர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

நீலாவதியின் வீட்டிற்கு சென்று சண்டையிட்டுள்ளனர். இது குறித்து தகவலறிந்த பரமக்குடி அனைத்து மகளிர் காவல்நிலைய காவல்துறையினர் நீலாவதியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதில், சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது உறுதி செய்யப்பட்டது.  

நீலாவதி மற்றும் உடந்தையாக இருந்த சிவகங்கை மாவட்டம் காளையார்கோயிலை சேர்ந்த மஞ்சுளா (எ) பஞ்சவர்ணம், ஆட்டோ ஓட்டுநர் பாண்டி ஆகிய 3 பேரையும் சிறுமியை கடத்தியது, பாலியலுக்கு உட்படுத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.